கலையாட்டு விழா
வறுமையின் கோர பிடியில் சமூகத்தின் புறக்கணிப்பால் கவனிப்பாரற்று வெளிச்சத்திற்கு வராத பல குழந்தைகளின், இளைஞர்களின் பன்முக திறமைகளை தேடி கண்டறிந்து அந்த மண்ணின் மைந்தர்களை கொண்டாட தனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொள்கிறது நாணல் நண்பர்கள் குழு.
அதன் முதல் முயற்சியாக பல சமூக நல விரும்பிகளின் பங்களிப்போடு " கலையாட்டு விழா " (கலை + விளையாட்டு) என்ற நிகழ்ச்சியை மதுரை, கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பாடு செய்திருக்கிறோம். 30க்கு மேற்பட்ட கலை, அறிவு, விளையாட்டு போட்டிகளை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இதை கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் எடுத்து செல்ல விரும்புகிறோம்.
தற்போது அங்கு வாழும் 60வதுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை 6 அணிகளாக பிரித்து போட்டியை நடத்துகிறோம். அதிக வெற்றி / அதிக விட முயற்சியோடு அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று நம்மை ஈர்க்கும் கலைஞர்களுக்கு, வீரர்களுக்கு, அணிகளுக்கு 6 சிறப்பு பரிசுகள் மற்றும் 6 மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடுகிறோம்.
சிறந்த கலைவீரர் பரிசு - (வீரன் பிரவீன் நினைவு பரிசு + மரக்கன்று & தியாகி சொர்ணத்தம்மாள் நினைவு பரிசு + மரக்கன்று)
சிறந்த அணி பரிசு - (கார்கில் நினைவு பரிசு + மரக்கன்று)
அறவழி செல்வன் / செல்வி பரிசு – ( திலீபன் நினைவு பரிசு + மரக்கன்று & செங்கொடி நினைவு பரிசு + மரக்கன்று)
சிறந்த நன்னெறி அணி பரிசு - (முத்தமிழ் பரிசு + மரக்கன்று)
விழா முடிந்த பின் அவர்கள் எந்த தளத்தில் சாதிக்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்து, அதற்க்கான பயிற்சியும் பாதையும் அமைத்து கொடுக்க பெரும் முயற்சி எடுப்போம்.
இந்த சிறு நிகழ்ச்சியில் பங்கெடுத்து கொண்டு உழைப்பு ரீதியாக உதவ விரும்பும் தோழர்கள் முன்கூட்டியே தெரியபடுத்துங்கள். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்.
நாள் : 06 & 07/07/2013 (சனி & ஞாயிறு )
இடம் : குழந்தைகள் நல அறகட்டளை, அழகர் கோவில் வழி, கடச்சனேந்தல் , மதுரை - 107.
தொடர்புக்கு : 9894021023 & 9543663443
இந்த உலகம் இப்போது போல்
எப்போதுமே தலைகீழாக இருக்குமென்றால்
அதை நிமிர்த்தி வைப்பது
நாமன்றி வேறு யார்?
--- உருகுவே எழுத்தாளர்