சிரிக்கும் மலர்கள்

இல்லார் தமக்கு உதவிப் பார்
இன்பம் அதனால் உண்டாகும்
எல்லா நூல்களும் கூறிடுதே
அதுவே பெருநற் பணியாகும்
இல்லார்க் குதவுதல் பெருந்தொண்டு
பெற்றார் மகிழ்வர் அதுகொண்டு
பூவாய் மாறும் அவர்முகங்கள்
அவையே சிரிக்கும் நறுமலர்கள் !

எழுதியவர் : Arumugam (8-Jul-13, 7:49 pm)
சேர்த்தது : valarselvi arumugam
பார்வை : 52

மேலே