க(த)ண்ணீர் தேசம்!

பணக்கார பானங்களுடன்
காதல் வயப்பட்டவளே!
பாமரனுடன் ஊடலுற்றவளே!
இவ்வுலகை
உருவாக்கி, உயிராக்கி, உருகாத்து
உருகுளைப்பவளே!
உன் பயணப்பாதையை பாழாக்கிய
அரசியல்'வியாதிகளை'
அரவணைப்பவளே!

தன் தாயை பழித்தாலும்
தண்ணீரை பழிக்காத
பாமரனை பலிகடா ஆக்காதே!
அவனுடனான காதலில்
ஊடல் வேண்டாம்
கூடிவிடு அவன் உயிர்காக்க!

எழுதியவர் : சக்தி (11-Jul-13, 7:02 am)
சேர்த்தது : சக்திவேல் காந்தி
பார்வை : 108

மேலே