நினைவில் வை !!
பாடும் கடல் மீன்கள் பெற்ற
மணித்திரு நாடே - நாடும்
எதிர் தேசத்தோடுனக்கு
நாட்டம் ஏனோ ?
பூனை தின்ற
புல்லு போலனதிந்த - நீல
பூவை சூடும் பூவை பெற்ற
மக்கள் கூட்டம்
ஒரு குடை பிளவு பட்டு
மூனாய் போச்சு
குடை நடுவில் பொத்தல் விழுந்து
கிழிஞ்சும் போச்சி !
அடிமை மீட்டு அடிமையாக்கி
அடக்கும் கூட்டம்
தலையின் மீது
இடியை தாங்கும் நாளுமாச்சி
வெறி பிடிச்ச நாயை போல
முன்னவங்க
வெளி நடப்பு தெரியாமல்
விதச்சதெல்லம்
பார்த்திருக்க விளைந்தது -நாம்
அறியாமலே -அதை
அறுவடையும் செய்கிறோம்
இந்நாளிலே !
அறிவாலே அறிவாளை
அடக்கிடலாம் -நம்
அறுவடை பற்றி எதிர்காலம்
அறியாவரை !
அறுத்ததெல்லாம் தூக்கிப்போடு
அடுப்பு நெருப்புக்கு
தவரியேதும் கொடுத்திடதே
பிள்ளைகளுக்கு உன் பிள்ளைகளுக்கு !!!!!!!

