ஒற்றூமைக் கீதம்
நாங்கள்
பூட்டில்லாவீட்டின்
சொந்தக்காரர்கள்
*
எங்கள்
வீட்டுக்கதவுகள்
தினமும்..
திருடர்களுக்காய்
” நல்வரவு” பாடும்
நிறைவேறா
எங்கள்
எதிர்பார்ப்புகளினிடையில்தான்
பசி...பசி...பசி...
வயிற்றுப்பசிக்காய்
நாங்கள்
கைநீட்டும்போது
அவர்கள்
கைபூட்டைக்கூட
உடைத்துவிடுகிறார்கள்
*
எங்களுக்குள்ளும்
ஒற்றுமைகீதம் இசைக்க
கவிஞர்கள்...
இருக்கிறார்கள்
.