பூக்கள் பொறாமையுடன் பார்த்தன

இவள் வந்து தொட மலர வேண்டுமென்று பூக்கள் காத்திருந்தன
இவள் வரவேண்டும் என்னைத் தொடவேண்டும் என்று நான் காத்திருந்தேன்
இவளோ தென்றல் வந்து தன்னை தன் கூந்தலைத் தழுவ வேண்டும் என்று காத்திருந்தாள்
தென்றலோ எங்கோ ஏதோ ஒரு ஏரியில் அலைகளுடன் ஆடிக் கொண்டிருந்தது
தென்றலைச் சென்று அழைத்து வரவா என்று நான் இவளைக் கேட்டேன்
தென்றல் வீசும் இடத்திற்கு நாமே செல்வோம் என்று என்னுடன் கைகோர்த்து நடந்தாள்
பூக்கள் பொறாமையுடன் பார்த்தன !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Feb-25, 10:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே