பிரிவு

என்னை விட்டு நீ பிரிந்து சென்றாலும்
உன்னை மறக்க தெரியவில்லை என் மனதுக்கு...
இரவு நேரங்களில் நித்திரையையும் பறிக்கிறாய் கனவாய் வந்து..
அவ்வேளைகளில் கண்களில் ஈரமாய் கசிந்து கொண்டிருக்கின்றன உன் நினைவுகள்
மரிக்கவும் மனதில்லை மறுபடியும் நாடி வருவாய் என்ற நம்பிக்கையில் ..
வாழ்க்கை இறுதிவரை பயணித்து பார்க்க துணிந்துவிட்டேன் ....உன் நினைவுகளோடு... !!

எழுதியவர் : சுரேஷ் (26-Jul-13, 10:38 am)
Tanglish : pirivu
பார்வை : 138

மேலே