அழுகிறதா அழுகிறதா
பாடல் !
மனிதா மனிதா
அழுகிறதா அழுகிறதா
முட்களோடு சேர்ந்து வாழும்
பூக்கள் என்றும் அழுகிறதா
முட்களோடு சேர்ந்தே வாழும்
நிலையை எண்ணி அழுகிறதா அழுகிறதா
விழுகிறதா விழுகிறதா
வானம் தன்னில் தனித்து வாழும்
நிலவு என்றும் விழுகிறதா விழுகிறதா
மண்ணில் விழுகிறதா
தெரிகிறதா தெரிகிறதா
துன்பம் என்றும் தனித்து வருவதில்லை
இன்பம் என்றும் இணைந்து வருவதில்லை-அட
துன்பம் கண்டு கலங்காதே - நீ
இன்பம் கண்டு மயங்காதே
வாழ்க்கை என்பது இங்கே ஒரு
வாசம் வீசும் பூக்களம்
வாசம் வீசும் பூக்களை
வெறுப்பது இங்கே யாரடா -வாழ்க்கையோடு
வாழ்ந்துதான் நீ பாரடா
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் -அதில்
நீயும் நானும் ஒரு வண்டாட்டம்
தேனை சுரக்க பூக்களும் இருக்க
ஏனடா நீயும் வாழ்வை வெறுக்க
வாழ்க்கை ஒரு வான்மேகம் -அதில்
நீயும் நானும் புல்போல
நீரை சுரக்க வான்மேகம் இருக்க
ஏனடா நீயும் வாழ்வை வெறுக்க .
வாழ்க்கை ஒரு கடலாட்டம் -அதில்
நாமெல்லாரும் அலையாட்டம்
கரையை முத்தமிடாத
கடலலைகளும் இங்கே கிடையாதே .
***************** நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்