அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்.....!!!!

அம்மா என்று
அழைத்த சத்தம்
உயிர்களிடத்தில் மாறுபட்டது......

மாடு மா என்றது
ஆடு மே என்றது
கிளி கீ என்றது
குயில் கூ என்றது

ஆனால்
அவற்றுக்கு கிடைத்த
தாயின் அன்பு ஒரே மாதிரியாக இருந்தது.....

ஓரறிவு ஆறறிவு வேறுபாடு அங்கு இல்லை....

ஆம்......

நீயும்
நானும்
அவனும்

இந்து
முஸ்லீம்
கிறிஸ்டியன்

நம் அனைவருக்கும் ஒரே அன்னை....

அன்பு என்ற ஆண்டவனே.....!!!!

அனைவருக்கும் எனது ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்..........!!!!

அன்புடன் ஹரி

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (9-Aug-13, 5:13 pm)
பார்வை : 95

மேலே