அன்புக்கு அளவில்லை அம்மா என்ற அன்னை ஒருத்தியிடம்

போர்வையால் போர்த்தாலும்
கண் பார்வையால்
பாசம் கொண்டு பார்ப்பவள்
அம்மா ,,,,
கண் மூடி தூங்கினாலும்
தன் கை கோர்த்து
கட்டி அணைத்து
உறங்குபவள் அம்மா,,,
எறும்பு கடித்தாலும்
என் பிள்ளை
என்று ஏங்குபவள்
அம்மா,,,,
அன்புக்கு அளவில்லை
அம்மா என்ற
அன்னை ஒருத்தியிடம்
மட்டுமே ,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (11-Aug-13, 2:46 am)
பார்வை : 87

மேலே