ஏன் இந்த வன்மம்

ஓடும் பேருந்தில் ஒரு பெண் !
ஒடுங்கிய சாலையோரம் ஒரு பெண்! -
இன்னும் வெளிவரா செய்திகள்
எத்தனையோ ???-
எல்லை இல்லாமல்
தொடரும் பெண்வன்மங்கள்
எத்தனையோ ??

தொடரும் வன்மங்கள்
தொலைய வேண்டுமென
அத்தனை மகளிரும்
வீதிக்கு வந்தால்
வீட்டுக்குள்
பெண் அடங்கவேண்டுமென
அறிவுஜீவிகள்
சில அறிவுரை சொல்லும்!-
தொடரும் வன்மங்கள்
தொடங்கியது
பெண்தானென காரணம்
அதுசொல்லும் !!!.

ஆடை விலகி
அங்கம் தெரிந்ததால்
ஆண்மை பெருகி அது
எல்லை தாண்டியதாக
காரணம் சொல்லும்.- அட
ஒருஅறையில்
தூங்கும் உன் அன்னை
ஆடை விலகினால்
மீறுமா உன் ஆண்மை ???.

பெண்
அவள் சமூகத்தடைகள் தாண்ட
தனியே வந்தால்
மீறி வருமாம் மிருகத்தனம் ?
கேட்கிறேன் உன் தங்கை
தனியே இருந்தால் தடுமாறுமா?

உடை
உன் மனக்கலங்களை !
உணர்
உன் தவறுகளை !!

பெண்மையும்,ஆண்மையும்
அன்பில் கலத்தல்தான் காதல்
காதல்வழி பிறத்தல்தான்
உண்மை காமம் - இதை
உணரா மணிதனே
உன் பிழை தவிர் .
அன்பில் கலந்து
அகிலம் வாழ
உயர்பெண்மை பேணி
உலகில் வாழ்ந்திட !!!!!

எழுதியவர் : Jeyarammadasamy (11-Aug-13, 10:03 am)
சேர்த்தது : Jeyarammadasamy
Tanglish : aen intha vanmam
பார்வை : 113

மேலே