எது வாழ்க்கை
எது வாழ்க்கை
தாய் மடியில் துயில் கொள்கிறதே
அந்த குழந்தை வாழ்வதா ?
பள்ளி சென்று படிக்கும் வாழ்க்கையா ?
கல்லூரி வாழ்க்கையா ?
காதல் வாழ்க்கையா ?
கல்யாண வாழ்க்கையா ?
குழந்தைகளோடு வாழும் வாழ்க்கையா ?
தேடி அலைந்தேன்
தீர்வு கிட்டவில்லை !
கீதை வரிகள் சட்டென கண்ணில் ?
இதுவும் கடந்து போகும்!
இம்சிக்கும் துன்பங்களும்
எல்லை இல்லா இன்பங்களும்
தூக்கமில்லா இரவுகளும் கடந்து போகும்
பிறந்தது ஞானம்
நேசித்தேன்
ஒவ்வொரு உயிரையும் !
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்கையை