நீ உன்னை அறியாமல் !...

இளமை

தினம் தினம்
இழக்கும்
உன் இளமையை

தினம் தினம்
யோசித்துப்பார்
நீ

வயிற்ருக்குள் நீ
கருவாய்

பிறக்கும்போது நீ
மழலையாய்

பிறந்தப்பிறகு நீ
குழந்தையாய்

ஓடி திரியும் போது நீ
செல்வமாய்

படிக்கும்போது நீ
மாணவனாய், மாணவியாய்

மணக்கும்போது நீ
கணவனாய், மனைவியாய்

உனக்கு பிள்ளை பிறக்கும்போது நீ
தாயாய் , தந்தையாய்

உன் பிள்ளைக்கு பிள்ளை பிறக்கும்போது நீ
பாட்டனாய், பாட்டியாய்

நீ
உன்னை அறியாமல்
உனக்கு தெரியாமல்
உன்னையே

தினம் தினம்
இழக்கிறாய்
நீ

இனி
நீ
இழக்க
என்ன இருக்கிறது

நீ
யோசித்துப்பார்
தினம் தினம்
நீ

என்றும் அன்புடன்

எழுதியவர் : எல்விஸ் ராஜு (14-Aug-13, 4:39 pm)
சேர்த்தது : எல்விஸ் ராஜு
பார்வை : 65

மேலே