இதழ்கள் இல்லாத மலர்கள்.....!
இதழ்கள் இல்லாத மலர்களில்
வாசம் வீசக் கண்டேன்
மானே உன்னாலே.....!
பிச்சிப் பிச்சிக் கிடக்கும் மேகங்கள்
பின்னிப் பிணைந்து இருப்பதைக் கண்டேன்
செல்லமே உன்னாலே.....!
மழையில் நான் நனைந்த போது
கடலில் அமிழ்ந்த ஆனந்தம்
கண்ணே உன்னாலே.....!
உன் நிழல்கூட என்னிடம் இல்லை
ஆனாலும் நிஜம் என்று காதலிக்கிறேன்
கண்மணியே உன்னை....!