யாதுமாகிய நான்...!

மனமென்னும் கடலில் இருள் சூழ்ந்திருக்க
காலைக் கதிரவனாய் நீ வந்து நிறைந்திருக்க
இருளும் விலகியது
இன்பமான அலைகள் மனதைத் தழுவியது...
===============================================
கற்பூர தேகம் கொண்ட ஒளி தீபமே
கலியுகத்தை கடந்த பின்னும் - நின்
கருணை வேண்டும் இவ்வுலகிற்கு.....!
===============================================ஆறுதல் தேடி நின் திருவடியில்
மனம் புதைத்தேன் அம்மையப்பனாய் ஆறுதல் தந்தாய், விழித்துப் பார்த்தேன்
கவலைகள் நிறைந்த என் நெஞ்சத்தில் நின் தோற்றம் நிறைந்திருக்க நிம்மதி எனக்குள்....!
===============================================
தேவரீர் உமது உருவத்தை
தன்னிலை மறந்து
உற்று நோக்கிப் பார்த்தேன்
சற்றே உள் நோக்கிப் பார்த்தேன்
ஒளிதீபம் மிளிர்வதைக் கண்டேன்...!
===============================================
ஆன்மீகம், ஆன்மாவின்
ஆழத்தில் இருக்கும் அற்புதம்
அவரவர் என்னம்போல்
அரிதாரம் பூசி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிரார்கள்.
===============================================

எழுதியவர் : நா, வளர்மதி. (19-Aug-13, 7:44 pm)
பார்வை : 55

மேலே