யார் குற்றம் ?

கரைக்க கரைக்க
கல்லும் கரையும்
பழமொழி பொய்தானே!
உன் இதயம்
அறியாமல்
முன்னோர் சொன்னது.

பெண் மனம்
பூ
என படித்தது
ஏட்டு சுரைக்காய்
கறிக்குதவா, கதைதானே!

மல்லிகையாய்
என் மனம் மனந்தாலும்
மங்கையே
நீ
சூட மறுப்பது,
விந்தையே!

காகித பூவாய்
காட்சி பெற்றது
உன்
விழிகளின் குற்றமா
இல்லை - உன்னில்
வீழ்ந்தவன் குற்றமா?

மன்றம் தேடும்
மாட புறாவே
என் வானில்
பறக்க மட்டும்
உன் சிறகுகள் விரியாதோ?

குற்றம் என்ன
என்னில் கண்டாயோ?
குலமகளே!
நம் குடும்ப விளக்கை
ஏற்றாமல் - குளிர்காய்கிறாய்
என்னை தீக்கு இரையாக்கி.

பாரதி பாடாத
புதுமை பெண்ணே!
படித்து அறிவேன்
உன்னை நன்றே!!

- செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : - செஞ்சிக்கோட்டை மா.மணி (26-Aug-13, 5:37 pm)
பார்வை : 94

மேலே