அதுவரை நினைவில்லை!

பொத்தல்...பொத்தலாய் வீட்டுக்கூரை,
அழுது வடியும் அரிக்கேன் விளக்கு,
சமைத்து நாளான அடுப்பு,
சொட்டையாய் நாலைந்து பாத்திரங்கள்,
முக்காலியாய் போன நாற்காலி,
போர்வையாய் கோணி அதனுள்
நோய்களின் சொந்தக்காரியான அம்மா
எதுவுமே நினைவில்லை!
காதலென்று அவள் பின்னால்
அலைந்து சீரழியும் வரை?

எழுதியவர் : ஜ.லலிதா (30-Aug-13, 9:51 pm)
பார்வை : 69

மேலே