தூக்கத்தை தொலைத்த துக்கங்கள்

..."தூக்கத்தைத் தொலைத்த துக்கங்கள்"....

தூக்கம் தொலைந்துதான் போயிற்று,
தொலைதூரத்தில் இருந்து நீ மீட்டிய
சோக கானத்தை கேட்டுவிட்டதால்....
சொல்லியது கொஞ்சம் தான்.... ஆனால்
சொல்லாமல் விட்டது உலகினை மிஞ்சும்....
ஆனமட்டும் முயற்சித்து விட்டேன்..,
அழுதழுதும் பார்த்து விட்டேன்.....
ஆற்றமாட்டாமல் ஆர்ப்பரிக்கும் மனதிற்கு
ஆறுதல் சொல்லிட வார்த்தைகள் கிட்டவில்லை...
எம்மை மன்னித்து விடு மாசில்லா உறவே....,
மலையளவு உள்ள உன் துயரத்தை
கடுகளவும் குறைத்திட வழி புரியவில்லை.
நீ உன் மனதினிலிருந்து இறக்கிவிட்ட உன்
பாரம் என் தோளில் வலுவாகப் பற்றிக்கொண்டு,
என்னை நிலைக்குலையச் செய்து விட்டது...
ஒன்று மட்டுமே என்னால் முடிகின்றது....
உனக்காக இறைவனிடம் இறைஞ்சுவது..
"இறைவா, உன் பதிவினில் ஒன்று,
பலமாக பாதிக்கப் பட்டிருப்பது தெரியவில்லையா?
பரிதவிக்கும் அந்த பரிதாபத்திற்குரிய ஜீவனை
உன் பாசவலைக்குள் மீட்டுக் கொண்டு வந்திடு...
உன்னால் முடியும்......
உன் ஒருவனால் மட்டுமே முடியும்.....!!!"

**************************************

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (6-Sep-13, 7:00 am)
பார்வை : 249

மேலே