சொட்டும் சாரல்-கே.எஸ்.கலை
ஒளி எழுதும்
கருப்புக் கவிதை.
நிழல் !
==
என்கண்
என்னுயிர்க் குடிக்கிறது.
எதிரில் அவள் !
==
இதயத்தை விட
இதழ்களில் வாழ்கிறது
காதல் ! (சிலேடை)
==
புவியோடு
முரண்படுகிறது மனது.
வறட்சியில் மழை !
==
நச்சு மரம்
நிழல் தருகிறது.
வட்டி !