தமிழரின் உறுதிமொழி

பிறப்பதும் இறப்பதும் ஒருமுறை தான்
அப்பிறப்பை என்னை இவுலகிற்கு
அறிமுகப்படுத்திய எம் தாய் மொழியான
தமிழுக்கே அற்பனைச்செய்வேன்

தமிழும் தமிழர்களும் என் இரு கண்கள்

மந்திரமும் தந்திரமும் வேண்டாம்
மதமெனும் போதையும் வேண்டாம்
சாதியெனும் சாத்தானும் வேண்டாம்
இம்மூன்றையும்விட மிகத்தூய்மையான
எம் முத்தமிழே எம் சாதியுமாகி
மதமுமாகி மந்திரமாகும்

புவியையும் ஆகாயத்தையும் பிளந்து
தோன்றி எம் இனத்தை காக்க தவறிய
கடவுள்கள் வேண்டா
புவியும் ஆகாயமும் அதிர களம்
கண்டு எம் இனத்தை காத்த வேங்கைகளே
எம் கடவுள்களாகும்

தமிழும் தமிழர்களும் வாழ
இவுலகையும் அழிப்பேன்

சமுகத்தோடு ஒன்றி வாழ்வோன்
எந்த சூழ்நிலையாயினும் எம்
தலை வீழ்ந்தாலும் தமிழும்
தமிழர்களையும் தலைநிமிரச் செய்வேனென
தமிழ் மீது ஆணையிட்டு
உறுதி மொழிகிறேன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (18-Sep-13, 11:33 am)
பார்வை : 126

மேலே