நமக்குள்...

ரகசியங்கள் இல்லை

என்று ஆனபின்,

பாலின வேறுபாடுகளில்லை,

பார்ப்பவர்கள்

பிரித்து பார்க்க.

நமக்குள் பிரிவில்லை,

காதலுமில்லை

நட்புமில்லை,

உணர்வில் ஒன்றானபின்

உருவம் ஏது,

வெற்றிடத்தை

எதைக்கொண்டும்

நிரப்பலாம்,

நீயாகவும் நானகவும்

நிரம்பியிருப்போம்

நீங்காது,,

எழுதியவர் : சபீரம் sabeera (19-Sep-13, 1:59 am)
பார்வை : 81

மேலே