அன்னையே !! நீ வாழ்க !!

ஆயிரம் உறவுகள் வரலாம்
உலகில் அன்னையைப் போல
ஓர் உறவு வருவதில்லை
அங்கத்தில் அறை கொடுத்து
தங்கத்தைப் போல காத்து தவம் இருந்து
ஈன்ரெடுக்கின்றால் தன்னிகரற்ற தாய்மை அவள்
தூங்கம் துறந்து துன்பம் கலைய்ந்து இன்பம்
தருகிறாள் இவன் வளர்ச்சியில்
பருவம் காணும் போது பாதை மாறிப் போகாமல்
பாதுகாவலனாய் திகழ்கிறாள்
வாலிபம் அடைந்து தனக்கான மணவாழ்வு
அமைந்த பின் மறந்து போகிறான்
தன் வாழ்வில் இன்றை வரை வந்த
அன்னை எனும் உறவை
மதங்கள் அனைத்துமே!போதித்தன
மாதாவை மறந்திட வேண்டாம் என்று
மாநபியின் கூற்றும் அதுவே!!
அன்னையில் காலடியில் சுவர்க்கம் உண்டு என
பகர்ந்தாரே அவனியில் கிடைத்திடுமா??
இவளைப் போன்று இறக்கம் காட்ட ஒரூ ஜிவன்
முதியோர் இல்லம் தேடும் எம் இளைய
சமுகமே?? நாளை நாமும் முதியோர் ஆவோம்
என்பதனை மறந்து விட வேண்டாம்
தாய்மை என்றும் தூய்மையானது