+உனைப் பார்க்கத் தானோ+

உனைப் பின்தொடர்ந்து
====நானொரு வாலானேன்!
உன் பார்வைப்புயலில்
====பறக்கும் தாளானேன்!

பாறையின் இடுக்கில்
====சிக்கிய காலானேன்!
உனைப்பார்க்கத் தானோ
====நான் ஆளானேன்!

உனைச் சூரியனாய்எண்ணி
====சுற்றிடும் கோளானேன்!
காதல் வரம்கிடைக்க
====காத்திருந்து பாலானேன்!

கசங்கியே எரிந்ததால்
====பிஞ்சிட்ட நூலானேன்!
கண்ணீரில் தவிக்கும்
====ஏழையைப் போலானேன்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Oct-13, 12:31 am)
பார்வை : 165

மேலே