காமராஜர்

இன்று # காமராஜர் [ 15-07-1903 --
1975-10-02நினைவு தினம். காமராசர் --
விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம்
தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர்
குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள்
ஆவர். . அவருக்கு குல தெய்வமான
காமாட்சியின் பெயரையே முதலில்
சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள்
மட்டும், அவரை "ராசா"
என்றே அழைத்து வந்தார். நாளடைவில்
காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’
என்று ஆனது.
தனது பள்ளிப் படிப்பை சத்ரிய
வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார்.
படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும்
விட்டுக் கொடுக்கும் மனத்துடனும்
விளங்கினார்.
சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள்.
ஒருவர் கருப்பையா . - இவர்
துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர்
பெயர் காசிநாராயணன். இவர்
திருவனந்தபுரத்த
ிலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத
நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின்
துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார்.
அங்கிருக்கும் போது பெ.
வரதராசுலு நாயுடு போன்ற தேசத்
தலைவர்களின் பேச்சுக்களில்
கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப்
போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார்.
தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக்
காங்கிரசின் உறுப்பினராகவே ஆக்கிக்
கொண்டார்.
ராசாசியி தலைமையில் 1930 மார்ச் மாதம்,
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம்
நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார்.
அதற்காகக்
காமராசு கைது செய்யப்பட்டு கல்கத்தா அலி
சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த
ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்
அடிப்படையில் விடுதலை ஆனார்.
விருதுநகர் வெடிகுண்டு வழக்கில்
கைதாகி, சேலம் டாக்டர் பெ.
வரதராசுலு நாயுடு அவர்களின் வாத
திறமையால்
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால்
விடுதலை ஆனார். 1940-ல் மீண்டும்
கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கிருக்கும் போதே விருதுநகர்
நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்
பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின்
விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன்
பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக
முழுமையாகக் கடமையாற்ற முடியாத
நிலையில் அதில் ஒட்டிக்
கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய
கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல்
ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காக
கைது செய்யப்பட்டார். இந்த
முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக
அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின்
போது தான் காமராசு சுயமாகப் படித்துத்
தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.
மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த
நாடாளுமன்ற வாதியும் ஆன
சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர்
தன் அரசியல் குருவாக ஏற்றுக்
கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூ
ர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான
போது காமராசரைச் செயலாளராக ஆக்கினார்.
இருவரின் முயற்சியில்
காங்கிரசு கட்சி நல்ல
வளர்ச்சி கண்டு தேர்தல்களில்
பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம்
அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில்
சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச்
சென்று அங்கு தான் தேசியக்
கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர்
ஆனபோதும் முதலில் சத்தியமூர்த்தியின்
வீட்டுக்குச் சென்று அவர்
படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத்தான்
தன் பணியைத் தொடங்கினார்.1953-க்குப்
பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர்
கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக
அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த
நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப்
பொறுப்புக்கு வரத்
தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம்
குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய
காரணம். (அப்போது தமிழகம்
சென்னை ராச்சியமாக ஆந்திராவின்
பெரும்பகுதி, கர்நாடகாவின் சில
பகுதிகள் ஆகியவற்றைத்
தன்னகத்தே கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின்
செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக்
கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள்
அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல்
ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும்
சுருங்கிப் போக, காங்கிரஸின்
உள்ளேயே ராசாசிக்குப் பெரும்
எதிர்ப்பு கிளம்பி விட்டது.
நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக
அளவில் தீர்மானித்துக் கொள்ள
அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான்
அவமானப்படுவதைத் தவிர்க்க,
‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும்
தீர்மானம் கொண்டு வர வேண்டாம.
நானே விலகிக் கொள்கிறேன்’
என்று அறிவித்து விட்டாலும் தன்
இடத்திற்குத் தன்னுடைய முக்கிய
ஆதரவாளரான சி.சுப்பிரமணியத
்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார்.
அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான
எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின்
கூட்டத்தில் காமராசர் பெருவாரியான
வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதுதான், காமராசர் தமிழக முதல்வராக
1953 தமிழ்ப்புத்தாண்
டு அன்று பதவியேற்றதன் பின்னணி.
ராசாசி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித்
திட்டத்'தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக்
காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின்
எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய
உணவுத் திட்டம் இன்று உலக அளவில்
பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக
பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37
சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில்
இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில்
வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக
உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத்
தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப்
பட்டது.
காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த
காலங்களில் நாட்டு முன்னேற்றம்,
நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம்,
கல்வி, தொழில்
வளத்துக்கு முன்னுரிமையளித்து பல
திட்டங்களை நிறைவேற்றினார்.
அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய
நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர்
கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால்
அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு,
அமராவதி, வைகை, சாத்தனூர்,
கிருசுணகிரி,
ஆரணியாறு ஆகியவையாகும்.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட
முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும்
பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்
(MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள்
தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும்
ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின்
திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்ட
வை.
மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63)
முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்
பட்டிருந்த காமராசர் பதவியை விட
தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம்
என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித்
தொண்டர்களுக்கும் காட்ட
விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN
எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும்.
அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள்
பதவிகளை இளையவர்களிடம்
ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச்
செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம்
சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு.
இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன்
முதலமைச்சர் பதவியை பதவி விலகல்
செய்து (02.10.1963)
பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம்
ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார்
காமராசர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில
இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார்.
லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய்,
எசு.கே.பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர்
அவ்வாறு பதவி துறந்தவர்களில்
முக்கியமானவர்கள்.
அகில இந்திய அளவில் காமராசரின்
செல்வாக்கு கட்சியினரிடம்
மரியாதைக்குரியதாக இருந்தது.
அதனாலேயே 1964-ல் சவகர்லால்
நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின்
பிரதமராக லால் பகதூர்
சாசுதிரி அவர்களை முன்மொழிந்து காமராச
சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-
ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர்
மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல்
சூழ்நிலையின்
போது இந்திரா காந்தியை பிரதமராக வரச்
செய்ததில் காமராசருக்குக் கணிசமான
பங்கு இருந்தது.
காமராசருக்கு இந்திராகாந்தியுடன்
ஏற்பட்ட பிணக்கின் காரணமாக
காங்கிரசு கட்சி இரண்டாக உடையும்
நிலை ஏற்பட்டது. காமராசரின்
தலைமையிலான சிண்டிகேட்
காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன்
திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக்
கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம்
குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல்
பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக்
கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின்
தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார்.
இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அம
செய்தபோது அதனைக் கடுமையாக
எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர்.
இந்தியாவின் அரசியல்
போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும்
கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975
அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின்
பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர்
பிரிந்தது. அவர் இறந்த போது பையில்
இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர
வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த
வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்க
து. தன் வாழ்நாள்
இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

நன்றி முகநூல்

எழுதியவர் : படித்தது (2-Oct-13, 5:34 pm)
பார்வை : 55048

மேலே