விழியின் உரையாடல்

நீ சுவாசித்த காற்றை
என் நுரையீரல் நுண்ணறைகளும்
தேடி அலைகின்றன !

என் இதயம் மட்டும் காதலில் உள்ளது
என்று நினைத்திருந்தேன்! இப்போது
கண்களும் கூட
வேறு பெண்ணைப் பார்க்கிறேன் !
உன்னைக் காட்டுகிறது !

நீ நடந்து சென்றாய் !
என் முன்னால்
என் கண்கள் உதடுகளில் கவிதை எழுதியது !

எத்தனையோ நாட்கள் கவிதை எழுதினேன்
வார்த்தை எழுதுகோலில் பிறந்தன என்று
இப்போது தான்
என் விரல்கள் வடித்த சிற்பம் என்று !

கற்சிலையும் காதல் வயம் கொள்ளும்
உன் அழகினைக் கண்டு
நான் என்ன விதிவிலக்கா?

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (3-Oct-13, 7:42 pm)
பார்வை : 268

மேலே