தோழா!

தோழா!

என் ஆருயிர் தோழா!
தனித் தனியே பிறந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
நினைவுகள் அனைத்தும் ஒருமித்தது
கனவுகள் அனைத்தும் ஒருங்கிணைந்தது
படிப்பிலும்
படைப்பிலும்
நம் இதயத் துடிப்பிலும்
ஒன்றாய் இருந்த தோழா ...
இன்று
உறவென்று
உனை அரவணைக்க
வேறு கைகள்
வந்தவுடன்
உதறிட எப்படித் தான்
உனக்கு மனம் வந்ததோ ?
தோழா!
நீ தோல்வி கண்ட நேரம்
உனை ஆதரிக்க நானிருந்தேன்
இன்று எனை அரவணைக்க ஆதரிக்க
நீ இல்லையே . . .

எழுதியவர் : (8-Jan-11, 12:43 pm)
சேர்த்தது : தமிழ் அரங்கம்
பார்வை : 530

மேலே