உங்கள் சிந்தனைக்கு சில
உழைப்பிற்கு உதாரணம் ஒன்று எறும்பு, மற்றொன்று இதயம்.
சுதந்திரம் என்பது நல்லதை அடைவதற்கான ஒரு வழி, அதுவே முடிவல்ல.
சினம் அன்பை அழிக்கும், கர்வம் அடக்கத்தை கெடுக்கும்.
உடல் மெலிந்திருக்கலாம், ஆனால் உள்ளம் மெலிந்திருக்கக் கூடாது.
சிந்தனை இல்லாத கல்வி பயனற்றது. கல்வி இல்லாத சிந்தனை ஆபத்தானது.