“ காதல் வெற்றி “ – 5 காதலின்பம்

வஞ்சகன் வந்தான்
வஞ்சனை செய்தான்
விலங்கிட்டு பூட்டினான்
விதிவசமானோம்!

விலங்கறுக்க நேரம் வந்தது
விதி முடிவுக்கு வந்தது
வஞ்சம் தடுத்து வீழ்த்தப்பட்டது
வாழ்வில் வசந்தம் தொடங்கியது!

நண்பர்களைக் காத்து
நயவஞ்சகம் உடைத்து
நீதியை நிலைப்படுத்தி
நேர்மையாய் நடந்தோம்!

எங்கேயோ ஒருசந்திப்பு
எப்போதோ ஒருபார்வை
தொட்டுக்கொண்டோமில்லை
பலவருட நிகழ்வுகளில்!

எங்கேயும் சேர்ந்திருப்பு
எப்போதும் பார்வையிலே
சுகநினைவுகள் நனைக்கும்
நடந்திடும் நிகழ்வுகளில்!

அன்பான உணர்வுகள்
அணுவிலும் நுழையும்
அன்பான இதயம்
அற்புதங்கள் நிகழ்த்தும்!

தந்தையும் தமையனும்
ஊரும் உறவும்
சுற்றாரும் உற்றாரும்
சேர்ந்திருந்து சிறப்பிக்கும்

நல்லதோர் நாளில்
நல்லோர்களின் முன்னிலையில்
நன்மைதரும் நல்வாக்குகளில்
நாம் இணைந்தோம்!

நல்லவை நிகழ்ந்திடவே
நிம்மதி பெருகிடவே
நன்மைகள் நிலைத்திடவே
நாடே மகிழ்ந்திடவே

பார்ப்போர் வியந்திடவே
பெருமைகள் கூடிடவே
பிறப்பு சிறந்திடவே
பேரானந்தமாய் வாழ்ந்திடுவோம்!

(மூலக்கதை = பார்த்திபன் கனவு - " கல்கி " கிருஷ்ணமூர்த்தி)

!@!@!@---முற்றும்---@!@!@!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (16-Oct-13, 10:37 pm)
பார்வை : 125

மேலே