உனக்கு எழுதும் கவிதைகள்...[3]
அன்று
ஒரு கவிதையைத் தந்தேன்
உனக்கு
இன்று
உன்னை
அந்தக் கவிதை தந்தது
எனக்கு !
[8]
**********
உனது லட்சியம் எதுவென
என்னிடம் கேட்கிறார்கள்
எப்படிச் சொல்வேன்
உன்னைக் காதலிப்பதுதான்
என்பதை !
[9]
***********
உன் வீதி வழியிலும்
உன் வீட்டைச் சுற்றியும்
எத்தனை முறை அலைவது
உன்னைப் பார்க்க
என்னையே பார்த்திருக்க
எப்போது வருவாயோ
எனக்குள் !
[10]
*********
மேலே வீசிய எதுவும்
கீழே விழுந்து விடுகிறது
புவி ஈர்ப்பு விசையால்
நான் எங்கே இருந்தாலும்
இழுத்து விடுகிறாய்
விழி ஈர்ப்பு விசையால் !
[11]
*********
கவிதைகள் தொடரும்...