மனிதரில் இத்தனை நிறங்களா

சிக்னலில் மாட்டி நிற்கும்
ஒரு காலை நேரம்....
இன்று புத்தகத்தை தொலைத்து விட்டு
வந்தாயோ உன்னை தொலைத்து விடுவேன்
என்று அன்னையின் கோபம்..

மற்றொரு பக்கம்
அப்பா ஆயிரத்திற்கு எத்தனை
சைபர்.. சொல்லுப்பா-
வண்டியில் இருக்கும் குழந்தை
உனக்கு இதே வேலையா போச்சு....
வீட்ல அம்மாகிட்ட கேட்டு
படிக்கிறதுக்கென்ன??
தந்தையின் வெறுப்பு.....

சாயந்திரம் கடற்கரைக்கு
கூட்டிட்டு போக வரலைனா
இனி நான் உன்கிட்ட பேசவே மாட்டேன்
நானா??
உனக்கு ஆபீஸா???
அப்படின்னு நீயே முடிவு பண்ணிக்கோ
காதலியின் கோபம்......

நான் வரதுக்குள்ள
இன்னிக்கு நீ வீட்டுக்கு
வரலன்னா நீ இனி
வீட்டுக்கே வராதே...
மனைவியிடம் கணவன் ஆத்திரத்துடன்......

இந்த வாரமாவது
நகையை வங்கியிலிருந்து
எடுத்து தராம இருந்தீங்க என்றால்
இனி நம் வீட்டுக்கு
வரவே மாட்டேன்
நீங்களே குழந்தைகளை பார்த்துக்கோங்க.....
மனைவியின் வேகம்......

டேய் என்கிட்டே வாங்கின
பணத்தை நாளைக்குள்ள
தரவில்லை என்றால்........
உன்னை கொலை பண்ணவும்
தயங்க மாட்டேன்
நண்பனிடம் மிரட்டல்..........

சிறிது நேர
சிக்னல் காத்திருப்பில்
இத்தனை அழுத்தமா???

மனிதரில் இத்தனை நிறங்களா??......

எழுதியவர் : சாந்தி (24-Oct-13, 10:58 pm)
பார்வை : 241

மேலே