கற்பனைப் பூதங்கள்

உங்கள்
கற்பனைகளுக்கு
இறக்கை முளைக்கட்டும்
அவைகள்
விண்ணைத்தாண்டி
பறக்கட்டும்
நிலவில் நீந்தட்டும்
நட்சத்திரங்களை
அள்ளி வரட்டும்

உங்கள்
கற்பனைகளை
கவிதையாக்குங்கள்...
அவைகள்
காலத்தை வெல்லட்டும்

உங்கள்
கற்பனைகளை
இசையாக்குங்கள்
அவைகள்
இதயங்களை
இனிமையாக்கட்டும்

உங்கள்
கற்பனைகளை
ஓவியமாக்குங்கள்
அவைகள்
உண்மையின்
விஸ்வரூபம் எடுக்கட்டும்

உங்கள்
கற்பனைகளில்
விஞ்ஞானம் இருக்கட்டும்
அவைகள்
புதுமையின்
இன்னொரு விடியலுக்கு
வடிகாலாக மாறட்டும்

உங்கள்
கற்பனைகளை
அசிங்கமாக
அலையவிடாதீர்கள்
அவைகளுக்கு
கோபம் கொண்ட
கோரப் பற்கள் வேண்டாம்
அவைகள்
சந்தேகக் கண்களுடன்
சங்கடங்கள் செய்யவேண்டாம்
அவைகள்
பொறாமை புகைச்சலை
சுவாசித்து விட்டு
அவஸ்தைப் படவேண்டாம்
அவைகளின் தலையில்
அகந்தை கொம்புகள்
அலங்கரிக்க வேண்டாம்....

உங்கள்
கற்பனைப் பூதங்கள்
உங்களையே பயம்காட்டும்
அசந்தால்...?

உங்கள்
கற்பனைப் பூதங்கள்
உங்களையே
விழுங்கிவிடும்...
நிஜத்தில் வாழுங்கள்
நிஜத்தோடு வாழுங்கள்

உங்கள்
கற்பனைப் பூதங்களுடன்
தோழமை கொண்டால்...
நீங்கள்
கொஞ்சம் தடுமாறினாலும்
அங்கே இங்கே இருக்கும்
டாஸ்மாக் கடைகளுக்கு
அழைத்துச் சென்றுவிடும்

உங்கள்
உள்ளத்து அமைதியை...
பள்ளம் தோண்டி
புதைத்து விடும்

அன்பர்களே! நண்பர்களே!
உங்கள்
கற்பனைகளை
கவிதையாக்குங்கள்...

உங்கள்
கற்பனைகளை
கவலையாக்காதீர்கள்

(எழுத்து நண்பர்கள் எல்லோருக்கும்
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்)

அன்புடன்...........பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (1-Nov-13, 6:46 pm)
பார்வை : 485

மேலே