என் காதலிக்கு,

என் காதலியை பற்றி என்ன சொல்வது.,
கட்டியணைத்தபடி அவள் என்னருகே இருக்கையிலே.,
காவிய கவிஞனை மிஞ்சுகிறேன் நான்.,
அவள் கரம் தரும் வெப்பத்தில் கவிதை வரைகையிலே.,
அவள் உதிர்க்கும் சிரிப்பை பற்றி சொல்லவா?
வெட்க புன்னகையை கொட்டி அதை வேண்டாம் என்றே மறுக்கிறாள்..,
அவள் நெஞ்சில் புதையும் நிமிடத்திலே வரும் உள்ளக்கிளர்ச்சியை சொல்லவா?
பொய் கோபம் காட்டி அதையும் கூடாதென்கிறாள்
என் காதல் தேவதை.,
அவள் மடியல் பதிந்து கிடக்கையிலே கண்ட சொர்க்கத்தை விவரித்து சொல்லவா?
விரல் பூவை என் உதடு பதித்து தப்பென்றாள்
என் தங்க தாமரை.,
என்னுயிர் பருகி சுவைக்கும் அவள் ஒர விழி பார்வை பற்றி சொல்லவா?
கன நேர பார்வையில் சாட்டை சுழற்றி அவள் கடந்ததில் அதுவும் மறந்து போனதே.,
அவள் கால்கொலுசு மணிகள் பாடும் சங்கீதம் பற்றி சொல்லவா?
அவள் கை வளையும், காதின் ஜிமிக்கியும் என் மேல் கோபித்து கொள்ளும் அல்லவே.,
மொத்தத்தில் எனக்கும் என் அணுவுக்கும்
உயிர் தந்த
என் அன்பு அன்னை அவளே.,