எல்லாம் நீதான் ....
எங்கே பார்த்தேன் உன்னை ?
எப்படி நுழைந்தாய் என்னில் ?
உறக்கத்திலும் உளறுகிறேன்
எல்லாம் உன் தயவு ....
நினைவுகளை படைத்த
இறைவனை சபிக்கிறேன்
அகர வரிசையை
எழுத்து கூட்டி படித்த நான்
இன்று கவியை மாறினேன்.
நீ தந்த வரம் ...
நினைவுகளை தந்த நீ
நிஜங்களை தருவதற்கு
சீக்கிரம் வந்து விடு
நான் பெண் தானேயென்று
எண்ணி விடாதே...
இல்லை என்றால்
உனக்கு அர்ச்சனைகள்
அடுத்த கவிதையில் நிச்சயம்
ஆதவன்