என் நாட்கள் உன் சொந்தம்

எதிர்பாராமலே
என் வாழ்வில் வந்தாய் ,
எதிர்பார்ப்பை அள்ளி தந்தாய்..
உன்னை எதிர்பார்த்து
அசட்டுத்தனமாக
நான் செய்யும் எல்லாமும்
அழகாகிறது ..
அதை கண்டும் காணாமல்
நீ செல்கையில்
நெஞ்சில் காயங்கள் ஆழமாகிறது ...
அலைகளாய் வருடும் நினைவுகளில்
தொலைந்து போகிறேன் ..
அரைநொடி பிரிவிலும்
கலங்கி போகிறேன்..
உறங்கும் இரவிலே
விழித்திரிக்கும் நினைவுகளில்
விழி திறப்பேன் தினம் தினம்
உன்னை பற்றிய கனவுகளோடு ..
நான் புதிதாகிறேன்
நீ என்னுள் பூப்பதால்
இருந்தும் ,
புதிராகிறேன்!
எனை புரியாது நீ போவதால் ..
எனை மறந்தே
நான் ரசிக்கிறேன்
என் வழிகளில் மலர்ந்த
உன் சுவடுகளை ..
வழித்துணையாய் நீ வராவிடினும்
என் வழிகளிலே
நீ போனாய்
என்ற ஒரு சுகம் போதும்
ஒரு ஆயுள் நான் வாழ..
உறவாக நீ இல்லாத போதும்
ஏனோ ஒரு ஏக்கம்
என் உயிரோடு ..
நீ என் உணர்வாகினாய்
என் அறிந்தும் கூட
உதறிபோகிறாய் ..
நீ
எனை உதறிபோகிறாய்
அதை புரிந்தும் கூட
நான் சிதரிபோகிரேன்
உன் சிந்தனைகளிலே..
மறைந்திருந்து உன்னை பார்கிறேன்
மறந்தேனும்
திரும்பி எனை பார்ப்பாயா என்று..
மறதியாய் கூட
நானுன் நினைவில் இல்லை..
மறந்தும் கூட
என்னால் உன்னை மறக்க
இயலவில்லை ..
அன்பால் ஆள்கிறாய்
ஆதலால் வீழ்ந்துவிட்டேன் ..
இதில் காதல் இல்லை ,
நட்பிலும் நம் கை கோர்க்கவில்லை,
இருந்தும் ,
ஒரு புது உறவு இதயத்தில் ..
எனை உதறும் போதும்
எங்கோ நின்று
உன் இதழ் உதிரும்
புன்னகையின் சப்தம் போதும்
என் வாழ்நாட்கள் வசந்தமாக ..
திரும்ப திரும்ப
நீ விலகியே போனாலும்
என் வாழ்நாளெல்லாம்
நான் வாழும் நாளெல்லாம்
திரும்பி திரும்பி
உனையே எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருபேன் !
என் வாழ்நாட்களை
உனக்கு சொந்தமாக்கி....

எழுதியவர் : kk (13-Nov-13, 9:20 pm)
சேர்த்தது : confidentkk
பார்வை : 271

மேலே