என்றென்றும்

மையாக ஒட்டிக்கொண்டாள்
பொய்யாலே கட்டிப்போட்டாள்
என்னை மண்னோடு பிதைத்துவிட்டாள்
உயிரோடு அழித்துவிட்டாள்

அவளை உண்மையில் நம்பிவிட்டேன்
பார்த்ததும் உருகிவிட்டேன்
இன்று பிரியாலாம்
என்று சொல்லிவிட்டாள்
நொந்துவிட்டேன்

நொடியிலே இமைக்கலாம்
நொடியிலே பிரியலாம்
என்று சொன்னால்
துடிக்குமா என் இதயம்

இறைவனை பார்த்ததில்லை
அவள் இரு விழிகளை பார்த்தேன்
அதில் விழுந்தவன் நான்
இறைவனையே மறந்தேன்

ஆனால் அதே விழிகள்
இன்று என்னை நிரந்தரமாக
விழிமூடி சாக சொல்கிறது

கனவிலே கற்பனையை
வளர்த்தவன் இன்று
உன்னுடன் நிழலாட வந்தேன்
இன்று உன் நிழலை கூட
தொட முடியாத தூரத்தில் இருக்கிறேன்

நான் பிறந்தேன்
உன் மடியில்
சொர்க்கம் காண வேண்டும் என்று
ஆனால் உன் மடியில் இறக்கக்கூட வாய்பில்லையாடி கண்ணே !!!!!!

நான் உன்னுடன் மனமேடை
காண வந்தேன் என் திருமகளே
நீ என்னை மண் மேடையில் ஏற்றப்போகிறாயா

நான் சாகவேண்டும் என்று நினைக்கிறேன்
உன்னுடன் வாழ வேண்டும் என்றும் துடிக்கிறேன்
துடிப்பிலே உயிரை இழக்கிறேன் கண்ணே!!!!

கண்களுக்கு கண்ணீர் சொந்தமில்லையா
என் கரங்களுக்கு உன் துணை தேவையில்லையா
என் இன்பத்திலும் துன்பத்திலும் துணையாக நீ வேண்டும்
என்றென்றும்........

எழுதியவர் : kalaiselvi (14-Nov-13, 8:47 pm)
பார்வை : 128

மேலே