எதுவரை காத்திருப்பது
வறுமைக்கு வாக்கப்பட்டு
அவமானத்திற்கு அங்கீகரிக்கப்பட்டு
ஏமாற்றத்திற்கு ஏற்றவன் என்ற
பெயரை பெற்றேன்
அத்தனனயும் கடந்தது வாழ்க்கையில் சிறக்க வசந்ததத்தை தேடி சென்றேன்
விதியின் சதியால்
விழியில் பட்டு விட்டால் அவள்
விலகினாலும் விட்டு விடவில்லை- அவள் நினைவுகள் என்னை- அவள்
நினைவுகளால் கனவுகள் கொண்டேன்
கனவுகளால் அவள் மீது
காதல் கொண்டேன்
காதல் கொண்டதால்
மனதில் மகிழ்ச்சியை மறந்து
இமைகளை இழந்து
இருட்டில் நிற்கிறேன்
இருண்டது இரவானால்
விடியும்வரை காத்திருப்பேன்
விடியலும் இரவானால்
எதுவரை காத்திருப்பது .......?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
