சுதந்திரம்
சுதந்திர தாயின் கொடி
என் பாரத தாயே,
August 15, இந்நாள்,
150 ஆண்டுகளுக்கும் மேலாக,
எம் முன்னோர் விழைந்த நாள்...
24 மணி நேர காலச்சக்கரத்தில், ஆண்டுகளுக்கும் மேலாக சுழன்று,
செந்நிற உதிரம் சிந்தியும்,
அமைதி எனும் அஹிம்சை வழியிலும்,
பசுமையான வாழ்வு வாழ்ந்திட எதிர்பார்த்து கிடைத்த நாள்,
இன்று
இந்த நம் சுதந்திர நாள்.
எம் முன்னோர்களின் தியாகத்தையும்,வீரத்தையும்,விவேகத்தையும்
மரியாதை செய்ய, மூவர்ண கொடியாக்கி உன் கையில் தந்தான் உன் மகன் ஒருவன்...
அம்மூவர்ண கொடியை காணும் போது,
அது உணர்த்தும் உன் சுதந்திர போரட்ட தியாகி பிள்ளைகளின் நினைவஞ்சலியால்......
என் கரங்கள் தானாக உயர்ந்து, உரக்க சொல்கிறது நா
"ஜெய்ஹிந்த்"