அடச்சீ
...... அடச்சீ...
ஏன் இப்படி என் கூடவே வர்றே ...!
ஒழுங்கு மரியாதையா போயிடு..! என் கணவன் ஊர்ல இல்லாத சமயத்துல
இப்படி தொந்தரவு பண்ணுறது அசிங்கமா தெரியலையா....!
நான் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று
உனக்கும் ,உன் கும்பலுக்கும் தெரியாதா ?
நீயும் உன் கும்பலும் இப்போ போகல
உங்களை விரட்டி அடிக்கவும் நான் தயங்க மாட்டேன்.
ஒழுங்கா ஓடிடு ஜுரமே ...!
அப்படியே உன் கூட்டத்தார் சளி , இருமல் , உடல்வலி , தும்மலையும் கூட்டிகிட்டு
மரியாதையா போயிடு சொல்லிபுட்டேன்..
ஆஅ ஆ மா ...