உனக்கு மட்டுமா
ஒரு ஊரில் குல்லா வியாபாரி இருந்தார்,,,
அவர் ஊர் ஊராக சென்று குல்லா வியாபாரம் செய்து வந்தார்,,,,
ஒருநாள் அவர் களைப்பு மிகுதியால் ஒரு மரத்தின் அடியில் தன் குல்லா கூடையை வைத்துவிட்டு அதன் நிழலில் தூங்கினார்
அவர் கண்விழித்து பார்த்தபோது அவர் கூடையில் ஒரு குல்லா கூட இல்லை,, எல்லாவற்றையும் குரங்குகள் எடுத்து சென்று விட்டன
உடனே அந்த குல்லா வியாபாரி தன் தாத்தா சொல்லி தந்த படி தன் தலையிலிருந்த குல்லாவை எடுத்து கூடையில் போட்டார்
உடனே குரங்கு ஒன்று இறங்கி வந்து அந்த குல்லாவையும் எடுத்து சென்று விட்டது
அதை பார்த்த குல்லா வியாபாரி திகைத்து நின்றார்
அப்போது அந்த குரங்கு சொன்னது,
"கொய்யால உனக்கு மட்டும் தான் தாத்தா இருப்பங்களா"
{எங்கோ படித்தது ஆனா சத்தியமா என்னோட இல்லைங்கோ }