மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

விரிக்கச் சிறகுகள் நமக்கும் உண்டு
விளங்கிக் கொண்டால் மனசே நன்று...!

பூவை வைத்து மாலை கட்டு - சிரிப்
பூவை வைத்து சோலை கட்டு....!

இன்பம் என்பது தூரம் இல்லை
இங்கே இனிதாய் வீட்டுக்குளே....!

கடவுள் வரமும் காரும் சோறும்
காசை வீசினால் வருவ்தாய் தோன்றும் - நம்

கருத்தினில் நிம்மதி என்பது மட்டும்
கடமையை செய்வதில் மட்டுமே தோன்றும்...!

கடனே என்று சிரிப்பதை விடுநீ - உண்மைக்
காதலுடன் நீ உறவைக் கவனி......!

கடைசியில் நீயே புனிதனாய் இருப்பாய் - அக்
கடவுளும் வேண்டிட வரமும் அளிப்பாய்....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Dec-13, 11:56 pm)
பார்வை : 430

மேலே