இல்லாத காட்சி
வரைந்தவன்
வந்து போனான்
வராதவன்
வரையப்பட்டவன்
வெற்றுச் சுவர்
என்ற காட்சியில்
வளர்ந்து நின்றது
வருகைக்கான ஓவியம்...
கண்டு சென்றவன்
வருவான் அல்லது
போவான்...
வராதவனுக்கு,
வரையப்பட்டவனின்
வெற்றுச் சுவராக ,
காட்சியாகிறது
இனி வருபவனுக்கும்
வரையப் படுபவனுக்குமான
ஓவியம்....