குழந்தை

நேரில் சிரிக்கும்
நிஜ தெய்வம்!
இரும்பும் இளகும்
இனிய முகம்!
உலகில் தோன்றும்
உன்னத அதிசயம்!
தாய் என்றும்
தந்தை என்றும்
தத்துவ பெயர் சூட்டும்
தாரக மந்திரம்!
வருங்காலம் வளர்க்க வந்த
வரலாற்றுப் பெட்டகம்!
வாரிசு உரிமை கோர
வந்து உதித்த
வண்ண மலர்!