kathal

எனக்குள் காதல் பிறந்தது...
இரத்தத்தை உணவாய் அளித்த
அன்னையின் மடியில் தூங்கும் போது...
எனக்காய் உழைத்துக் களைத்த
தந்தையின் வியர்வை துடைக்கும் போது...
எதனையும் எனக்காய் விட்டுக்கொடுக்கும்
என் தமயனைக்காணும் போது...
உலகமே எதிர்ப்பினும் என் துணை நிற்கும்
தோழனின் தோள் சாயும் போது...
சுகமாயினும் சோகமாயினும் அதனைப்பங்கிட
தோழி ஒருத்தி அணைக்கும் போது...
இப்படி என்னுள் பிறந்த காதலை அளிக்க
நான் விரும்பவில்லை..
"நான் உன்னைக் காதலிக்கிறேன்"
என்று நீ கூறும் ஓர் வாய் வார்த்தைக்காக...

எழுதியவர் : ப்ரீத்தி (6-Dec-13, 3:48 pm)
பார்வை : 98

மேலே