இது தான் காதலா

அன்பே
தேன் துளியை
நுகர துடிக்கும்
பட்டாம் பூச்சியாய்
துடித்து
மகிழ்கிறதே உன் இமைகள் ...?

ஒன்றும் இல்லாமல்
இந்த இமைகளுக்கு
படபடப்பு எதற்கு ...?

கதிரவனை கண்ட
சூரியகாந்தி
மலர் போல்
உன் புன்னகை முகம்
நான் செல்லும்
திசையெல்லாம்
சுற்றி சுற்றி வலம் வருகிறதே ..?

திருவிழாவில்
தொலைந்து போன
குழந்தையை
தேடுவது போல்
உன் விழிகள்
என்னை தேடித்தேடியே அலைகிறதே ..?

ஒன்றும் இல்லாமல்
இந்த தேடல் எதற்கு ...?

கடற்கரை மணலில்
காதல் சின்னம்
வரைந்து மகிழ்கிறாய்...

நிமிடத்துக்கு
ஓர் முறை
புன்னகைத்து மகிழ்கிறாய் ...!

அன்பே
உன் விழி வாசலில்
பயணித்து
உன் இதயத்தில் தேடிப்பார்
அங்கு ஓர் முலையில்
காதலாய்
சம்மணமிட்டு
உட்கார்ந்திருக்கும்
நீ தேடும் என் முகம்....!

உன்
கொலுசிடமும்
கேட்டுப்பார்
என் காலடி தடத்தின்
மீதே
அது பயணித்த கதை சொல்லும் ....!

வெற்றிடத்தில் தான்
எல்லாமே இருக்கிறது
என் அன்பும்
நீ சுமக்கும் காதலும் ...!

உன் ரோஜா
இதழ் திறந்து
என் திருநாமத்தை
தென்றல் மூலம்
தூதனுப்பு
காத்திருகிறது
என் செவிகள்
நம் காதலுக்காக .....!

*************************************************************************

எழுதியவர் : வெற்றி நாயகன் (6-Dec-13, 2:49 pm)
பார்வை : 115

மேலே