நீயில்லா நான்
"சிந்திக்க மறுக்கிறது மனம்"
உனை சந்திக்காததால்..
எவ்வித சிந்தையுமில்லாமல்
சீர் கெட்ட செய்யுளாய் சிதறிக் கிடக்கின்றன எண்ணங்கள்...
எளிதில் திகட்டா எண்ணற்ற எண்ணங்கள் யாவும்
வண்ணங்கள் இழந்து, வலிகள் நிறைந்து
மடிந்த சவமாய் சலனமின்றி என் மனப் புதைகுழியில்..!
நீயில்லா நொடிகள் யாவும் நீள்கின்றன யுகங்களாய்!
நீரிழந்த மீனாய் துடிக்கிறதென் மனம் நிம்மதியின்றி!
வெறுமையாய் கழிகின்றதென் வாழ்க்கை பக்கங்கள்..
நீயில்லா நிமிடத்தை நினைத்ததில்லை நித்திரையிலும்!
ஆதலால் அழுகிறதென் இதயம் ஆறுதலின்றி....!
நீயில்லா வாழ்வும் நிலவில்லா வானமானது...