ஊஞ்சல் கட்டி ஆட வந்த வான் நிலா 555

உயிரானவளே...

தலை உயர்த்தி நான்
ரசித்த வான் நிலா...

இன்று என்னருகில்
வான் நிலா...

உன்னை கண்டு
தாலாட்டு பாடினேன்...

வான் நிலவும் தாலாட்ட
சொல்லி கேட்குதடி...

நந்தவன சோலையிலே
புஷ்பங்களால் தூளி கட்டி...

உன்னை உறங்க
வைக்கிறேன்...

நித்தம் என் இதயத்தில்
தூளி கட்டி ஆடுபவள்...

நான் ஆட்டிவிட நீ
தூளியிலே உறங்கடி...

புஷ்பங்களோடு
புஷ்பங்கலாக...

வான் நிலா ஊஞ்சல்
கட்டி ஆடிவிட...

என் வாசல்
வந்ததடி...

வாழும்
காலம் வரை...

உன்னை தூளியிலே தாலாட்டி
உறங்க வைப்பேன்...

என் மழலை
போலவே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Dec-13, 2:38 pm)
பார்வை : 980

மேலே