கிறுக்கல்கள்
தமிழ் நதிக்கரையில்
தவித்தேன், பருகினேன்
இலக்கியமென்றது
நதி நீர்.
மூளை குடத்தில்
அள்ளினேன், சிந்தினேன்
கவிதையென்றது
குடத்து நீர்.
-------------------------------------------
எந்த நொடியில்
எந்தன் மரணம் ?
மூச்சு உள்வாங்கி
வெளியிடும்போதா ?
வெளியிட்ட மூச்சு
உள்வாங்கும்போதா ?
-------------------------------------------
மரபு கிழவியை
கணினியில்
அலங்கரித்தேன்
அடடே !
புதுக்கவிதை குமரியிவள் !
-------------------------------------------
நாக்கு தாளில்
உருண்டோடிய குறுங்கவிதைகள்
நான் உண்ட சோறு !
--------------------------------------------
மணமுள்ள மல்லிகை
மயங்கி மலர்கிறது
மங்கையவள் கூந்தலில்...!
-------------------------------------------
கடற்கரை மணலில்
பதிந்த என்
பாதசுவடுகளை
எந்த அலை
பாவ கணக்குகளை
கழுவி விடுமோ?
-------------------------------------------
எதையோ சிந்திக்கிறேன்
எதை எதையோ எழுதுகிறேன்
எழுதுவது கவிதைதானா ?
யாப்பு இல்லை
இலக்கணம் இல்லை
சந்தம் இல்லை
சத்தம் இல்லை
என்னிடம் எதுவுமில்லை
நான் எழுதுவது கவிதைதானா ?
நான் கவிஞனா ?
----------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்