இன்னும் சில நொடி வேண்டும்

இன்னும் வேண்டும் சில நிமிடம்..!

உன்னோடு கைகோர்த்து நடக்கையில்..,
உன் மடியில் உறங்கையில்..,
நீ என் தலைமுடி கோதுகையில்..,
நம் பிழையை வாதாடுகையில்..,
பேருந்து பயணம் நீழ்கையில்..,
ஒய்யாரி உன்நடையில் பின்னழகு தென்படுகையில்..,
உன் கூந்தல் வருடுகையில்..,
உன் இதழோடு இணைகையில்..,
நம் தனி உலகில் உலவுகையில்..,
நோயுற்ற உன்னை கரம்கொண்டு அணைக்கையில்.,
ஆராத ரணத்தால் தவிக்கும் என்தாகத்தை நீ தணிக்கையில்..,
என் அன்னை உயிருடன் இருப்பதாய் நீ உணர்த்துகையில்..
இருவரும் சேர்ந்து செய்யும் sunday சமையலில்..,
உன் விரல் பிடித்து சொடுக்குகையில்..,
ஓய்வுதேடும் என்நெற்றி வியர்வையை நீ துடைக்கையில் ..,
ஓரமாய் நின்று உன் அழகை கண்டு ரசிகையில்..,
என் தனிமையை தள்ளி வைக்க உதவுகையில்..,
பிள்ளையென எனக்கு நீ உணவு ஊட்டுகையில்..,
என் ஆசைக்காய் உன்னை நீ உதிர்கையில்..,


என் உள்ளம்..,
இப்படி ஆயிர மாயிரம் தடவை

இன்னும் இன்னும் வேண்டுதடி உன்னில் இன்னும் சில நிமிடங்கள் நீழ..,!


உனக்காய்..,
என் மனதும் ஏங்குதடி..!
என் கற்பனை கண்ணே..!
நீ எங்கே இருக்கிறாயடி....?








ம்ம்ம்ம்
இப்டி என்னை நேசிக்கும் என்னவன்
என்று வந்து சேர்வானோ.?
நான் அறியேன்..!

எழுதியவர் : ஜென்னி (10-Dec-13, 2:58 pm)
பார்வை : 310

மேலே