மீனவன்

கோடை வெயிலானாலும்
மார்கழி குளிரானாலும்
கடல் அன்னையை
தரிசிக்கும்
மீனவனே..

மீன் முள்ளை
வீசிவிட்டு
உள்ளே
தள்ளும்
உள்ளத்திற்கு
விளங்குமா உன்
கஷ்டம்..

மளிகை விலை
அதிகரித்தாலும்
மண்நெய் விலை
அதிகரித்தாலும்
மீன் விலையை
குறைத்து கேட்கிறது
மானிடம்
குறை சொல்ல வில்லை
நான்
இதுவும் உண்மையே..

எழுதியவர் : வசீம் அக்ரம் (20-Dec-13, 11:01 am)
பார்வை : 104

மேலே