நெடுஞ்சாலை நாடோடி

தார் சாலையே உலகமடி
நாலு தகரத்துக்குள் வாழ்க்கையடி
உறவுகள் மறந்ததடி
உன் விழிகள் மட்டும் மிச்சமடி..

இயந்திர சூட்டின் உறக்கங்கள்
உன் இதய சூட்டைத் தேடுதடி..

காதல் தண்ணீர் இல்லாமல்
என் தாகம் கொஞ்சம் கூடுதடி..

கனவுப் பூக்கள் கூட
பூக்கும் முன்பே கருகுதடி..

எதிர் வரும் வாகனங்கள்
எமனை கண்ணில் காட்டுதடி..

வானம் இடியுதடி
வன்மழை குத்துதடி
சூரிய சூட்டினிலே
தேகம் எறியுதடி
கடும் பனிக் கூட்டத்தில்
இதயமும் உறையுதடி
வெறுமை நிறைக்கும் இருளுக்குள்
உயிரும் நடுங்கிப் போகுதடி..

வறுமை சுமந்த பயணமடி..
இறக்கி வைக்க முடியலடி..

இருந்தும்
கலங்காதிரு பெண்ணே..
சொன்ன வாக்கும் மறவேனடி...

எழுதியவர் : வெ கண்ணன் (20-Dec-13, 11:09 am)
பார்வை : 232

சிறந்த கவிதைகள்

மேலே